கோவை வடவள்ளி அருகே 8.5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை - 4 பேர் கைது!

வடவள்ளி அருகேயுள்ள அஜ்ஜனூர் பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த தேனியை சேர்ந்த மனோஜ்குமார்(33), மார்க்கண்டன் (33), பிரவீன் (31), தினேஷ் (27) ஆகியோரை கைது செய்த போலீசார், 8.5 கிலோ கஞ்சா மற்றும் 4 சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இதன் அடிப்படையில் இன்று (15.04.2023) வடவள்ளி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார், வடவள்ளி அடுத்த அஜ்ஜனூர் (ஸ்ரீ ராம் கார்டன்) பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் குமார் (33), மார்க்கண்டன் (33), பிரவீன் (31) மற்றும் தினேஷ் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.1.1 லட்சம் மதிப்பிலான சுமார் 8.5 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 94981-81212 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும், 77081-00100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...