மூலனூர் அருகே சரக்கு வாகனத்தின் பின்சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி!

திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே சரக்கு வாகனத்தில் ஏறி 8 வயது சிறுவன் எஸ்வந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடிரென வாகனம் ஓட ஆரம்பித்ததால், பின்சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், இவரது மனைவி மற்றும் 8 வயது மகன் எஸ்வந்த் ஆகியோருடன் மூலனூர் அருகே உள்ள ஆலம்பாளையம் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

நேற்றிரவு இரவு 8 மணி அளவில் சரவணன் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்தனர். சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது டாட்டா ஏஸ் வாகனத்தின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதமாக டாட்டா ஏஸ் வாகனம் கிளம்பியது. இதனால் பின் சக்கரத்தில் சிக்கிய எஸ்வந்த் படுகாயம் அடைந்தான்.

உடனடியாக சிறுவன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் எஸ்வந்த் காலையில் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

டாட்டா ஏஸ் வாகனத்தில் அதன் சாவி இருந்ததும், வாகனம் கியரில் இருந்ததுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...