பஞ்சாப் துப்பாக்கிச் சூடு - பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் கோவை வருகை!

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 வீரர்களின் உடல் தமிழகம் கொண்டுவரப்பட்டது. வீரர்களின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் தேனி மாவட்டம் தேவாரத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது.



கோவை: பஞ்சாப் மாநிலம் பதின்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த வனவாசியை சேர்ந்த தறி தொழிலாளியின் மகன் கமலேஷ். 24 வயதான கமலேஷ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்தில் சேவையாற்றி பணியாற்றி வந்த அவர், நேற்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்தார்.



இதையடுத்து, இராணுவ வீரர் கமலேஷ் உடல் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.



கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மற்றொரு தமிழக வீரர் தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த 23 வயதான யோகேஷ் குமார் ஆவார். வீட்டிற்கு ஒரே மகனான இவர், ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றி வந்ததுடன், தனது பெற்றோர்களுக்கு புதிதாக வீடும் கட்டிக்கொண்டு வந்துள்ளார்.

திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்து வந்த நிலையில் யோகேஷ்குமார் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். இவரது உடல் சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான தேனிக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...