கோவையில் மதநல்லிணக்க இப்தார் விருந்து - அனைத்து மதத் தலைவர்கள் பங்கேற்பு!

கோவையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனைத்து மதத் தலைவர்களும் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து, அனைத்து சமயத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.



இதற்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி முன்னிலை வகித்தார்.கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஹாஷ் சிக்ஸ்ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில், பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலயத்தின் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ்,

அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் முகம்மது அலி, தலைமை இமாம் அப்துல் ரஹீம் இம்தாதி, கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர், சி.எஸ்.ஐ.திருமண்டல உறுப்பினர் பிரவீன் விமல்,தி.மு.க.பகுதி செயலாளர் ரவி, 45 வது மாமன்ற உறுப்பினர் சுதா ரவி,மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



முன்னதாக நிகழ்ச்சியில் அனைத்து மத தலைவர்களும் சிறப்புரையாற்றினர். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரீச்சை, நோன்பு கஞ்சி, பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபி, கோவையில் மத நல்லிணக்கத்தைப்போற்றும் விதமாக பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதாகவும், அதேபோல இந்த இப்தார் நிகழ்வும் நடைபெறுவதாக தெரிவித்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...