தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ் புத்தாண்டையொட்டி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, ராஜபாளையம் என மற்ற மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மார்க்கமாக 40 பேருந்துகளும் என கோவையில் இருந்து மொத்தமாக 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


கோவை: தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் அதன் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக கோவையில் தங்கி வேலை பார்த்து வரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இவர்கள் கோவையில் இருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்க தயாராகி வருகின்றனர். இதனால் பேருந்து நிலையங்களில் இன்று கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷேச தினங்களில் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்புத்தாண்டையொட்டி இன்று முதல் கோவையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மார்க்கமாக பிற ஊர்களுக்கு செல்ல 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் பயணிகளின் வருகை ஏற்றபடி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...