கோவை மதுக்கரையில் போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து கேமரா திருட்டு!

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 20ஆண்டுகளாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமராவை மர்ம நபர்கள் திருட்டிச் சென்றனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: மதுக்கரையில் போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து கேமரா திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மதுக்கரை குவாரி ஆபிஸ் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் 20 ஆண்டுகளாக அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இன்று காலையில் வந்து பார்த்த போது, கடையின் முன் பக்க ஷட்டரை கியாஸ் கட்டிங் மூலம் வெட்டி திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமரா திருடப்பட்டதும், உள்ளே மிளகாய் பொடியைத் தூவிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலையில் மர்ம நபர்கள் கியாஸ் கட்டிங் மூலம் ஷட்டரை உடைத்து, உள்ளே நுழைந்து சிசிடிவி கேமராவை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் குணசேகரின் கடையின் அருகே உள்ள இளையராஜா என்பவரது, பைனான்ஸ் நிறுவனத்தின் ஷட்டரையும் மர்ம நபர்கள் வெட்ட முயன்றதும், ஆனால் ஷட்டர் கதவு சுவருடன் இணைக்கப்பட்டிருந்ததால், அங்கேயும் மிளகாய் பொடியைத் தூவி விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...