திருப்பூர் அருகே குப்பைகள் நிறைந்த பாறைக்குழியில் திடீர் தீவிபத்து!

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த பாறைக்குழியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



திருப்பூர்: அம்மாபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த பாறைக்குழியில் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் - அவினாசி சாலை, அம்மாபாளையத்தில் குப்பைகள் கொட்டும் பாறைக்குழி உள்ளது. குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தற்போது அங்கு குப்பை கொட்டப்படுவதில்லை.



இந்நிலையில் நேற்று நள்ளிரவு குப்பைகள் கொட்டப்பட்ட பாறைகுழியில் தீப்பற்றி எரிவதாக திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்புதுறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.



தகவலையடுத்து இரு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை ஒரு மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.



அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் யாராவது தீ வைத்து சென்றிருக்கலாம் என சந்தேகித்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...