திருப்பூர் அருகே குப்பைகள் நிறைந்த பாறைக்குழியில் திடீர் தீவிபத்து!

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த பாறைக்குழியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



திருப்பூர்: அம்மாபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த பாறைக்குழியில் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் - அவினாசி சாலை, அம்மாபாளையத்தில் குப்பைகள் கொட்டும் பாறைக்குழி உள்ளது. குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தற்போது அங்கு குப்பை கொட்டப்படுவதில்லை.



இந்நிலையில் நேற்று நள்ளிரவு குப்பைகள் கொட்டப்பட்ட பாறைகுழியில் தீப்பற்றி எரிவதாக திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்புதுறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.



தகவலையடுத்து இரு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை ஒரு மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.



அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் யாராவது தீ வைத்து சென்றிருக்கலாம் என சந்தேகித்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...