தாராபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா - அழகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து பூவோடு எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக் கடனாக, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, தேவேந்திர தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.



தாராபுரம்: தாராபுரம் மகா மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவில், பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திர தெருவில் உள்ளது பழமை வாய்ந்த மகா மாரியம்மன் திருக்கோவில். இந்தத் திருக்கோவிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கம்பம் எடுத்துவந்து பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு நடத்தினர்.



இந்த நிலையில், தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து தேவேந்திர தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பூவோடு எடுத்தும், பெண்கள் அழகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் பெண்கள் ஆண்கள் என இருவரும் சுமார் 10 அடி நீளம் வேலை அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.



பக்தர்கள் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து பூவோடு எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக் கடனாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தேவேந்திர தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஒரு தம்பதியினர் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...