குன்னூரில் பேக்கரியில் நுழைந்த கரடி - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

குன்னூர் அருகே உணவு தேடி பேக்கரிக்கு வந்த கரடி, நீண்ட நேரம் போராடியும் கடையை திறக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பகுதியில் சமீபகாலங்களாக கரடிகள், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது அதிகரித்து உள்ளது.

இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியில் கரடி ஒன்று நேற்று இரவு அப்பகுதிக்குள் நுழைந்து, உணவுக்காக அங்குள்ள பேக்கரியின் கதவை திறக்க முயன்றது.



நீண்ட நேரம் போராடியும், பேக்கரியின் கதவை திறக்க முடியாததால் ஏமாற்றமடைந்த அந்த கரடி, அங்கிருந்து வேறு பகுதிக்கு நகர்ந்து சென்றது. இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

அந்த காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், கரடி நடமாட்டம் குறித்து அப்பகுதி பொதுமக்கள், குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...