திருப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் விதிமீறல் - துணைமேயர் ஆய்வு

மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் திடீர் ஆய்வு செய்தார். விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.



திருப்பூர்: திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ 38 கோடியே 81 லட்சம் மதிப்பில் கடந்தாண்டு புதுப் பொலிவுடன் கட்டப்பட்டது.

தற்போது, பழைய பேருந்து நிலையத்தில் செல்போன் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், என 80க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, அக்கடைக்காரர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகளின் வெளியிலேயே பொருட்களை வைத்தும்,ஒரு சில கடைக்காரர்கள்அனுமதியின்றி நடைபாதைகளில் கடைகள் அமைத்தும்,கடைகளின் சுவர்களை இடித்து தனியாக ஒரு அறையும் அமைத்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது.



இதைத்தொடர்ந்து, மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை திடீர் ஆய்வு செய்தார்.



அப்போது, விதிமுறைகளை மீறி பெரும்பாலான கடைகள், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் அமைத்திருந்ததும், அதேபோல் மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியும் பெறாமல் கடைகளை இடித்து தனியாக ஒரு அறை அமைத்து இருந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு, விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைமேயர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...