கோவையில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவையில் தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியில், புகை இதயத்திற்கு பகை, உணவே மருந்து, சக்கரையை கட்டுப்படுத்துங்கள் இதயத்தை பாதுகாக்கலாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

அண்மைக்காலமாக மக்களுக்கு இருதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் வயது அதிகமானவர்களுக்கு மட்டும் இருதய கோளாறு ஏற்பட்டுவந்த நிலையில், தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக திடீர் மாரடைப்பால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் (கே.ஜி) மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் நீதிமன்றம், தெற்கு வட்டாட்சியர் அலுவலக சாலை வழியே நடைபெற்றது.

இதில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு உயர் ரத்த அழுத்தம் ஆபத்தானது, ஹார்ட் ஃபெயிலியர் என்பது மாரடைப்பல்ல, புகை இதயத்திற்கு பகை, உணவே மருந்து, சக்கரையை கட்டுப்படுத்துங்கள் இதயத்தை பாதுகாக்கலாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் .

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...