கோவை அருகே ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடிக்கு வீரவணக்கம்!

கோவை அருகே நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், வெலிங்டனில் உள்ள 25 மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.



கோவை: நாட்டுக்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1993ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சம்பாரி என்ற இடத்தில் உள்ள பனிப்பிரதேச மலைப்பகுதியில் 8 தீவிரவாதிகள் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற போது, அவர்களை எதிர்த்து நின்று போரிட்டு 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீரமரணம் அடைந்தார்.



தனி மனிதனாக இருந்து தீவிரவாதிகளை தாக்கி கொன்று வீரமரணம் அடைந்ததை போற்றும் விதமாக, இந்திய அரசு 1996ஆம் ஆண்டு இவருக்கு ராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா வழங்கி கவுரவித்தார்.



கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில், ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.



இந்நிலையில் அவரது நினைவிடத்தில் நடந்த 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ பிரிவின் சுபேதார் மேஜர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான 25 ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய வீரவணக்கம் செலுத்தி பின்னர் கென்னடியின் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...