கோவை அருகே ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடிக்கு வீரவணக்கம்!

கோவை அருகே நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், வெலிங்டனில் உள்ள 25 மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.



கோவை: நாட்டுக்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1993ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சம்பாரி என்ற இடத்தில் உள்ள பனிப்பிரதேச மலைப்பகுதியில் 8 தீவிரவாதிகள் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற போது, அவர்களை எதிர்த்து நின்று போரிட்டு 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீரமரணம் அடைந்தார்.



தனி மனிதனாக இருந்து தீவிரவாதிகளை தாக்கி கொன்று வீரமரணம் அடைந்ததை போற்றும் விதமாக, இந்திய அரசு 1996ஆம் ஆண்டு இவருக்கு ராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா வழங்கி கவுரவித்தார்.



கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில், ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.



இந்நிலையில் அவரது நினைவிடத்தில் நடந்த 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ பிரிவின் சுபேதார் மேஜர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான 25 ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய வீரவணக்கம் செலுத்தி பின்னர் கென்னடியின் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...