பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் கிராந்தி குமார் திடீர் ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டு, முன்னேற்பாடு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக சுதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.



இதனையடுத்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.



அங்கு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், கொரோனா பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

பின்னர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:



கோவை மாவட்டத்தை பொருத்தவரை தற்போது 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 10 முதல் 15 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இணை நோய் உள்ளவர்கள் மற்றும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி, கொரோனா பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...