கோவையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் கடந்த மார்ச் 23ஆம் தேதி ஆசிட் வீசியதில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டுள்ளது.


கோவை: நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சால் படுகாயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்த கவிதா என்பவர் மீது அவரது கணவர், ஆசிட் வீசியதில் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரித்த கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு நீதிபதி சிவா, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் படி இடைக்கால இழப்பீடு நிவாரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...