தாராபுரத்தில் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலை திருட்டு - போலீசார் விசாரணை!

தாராபுரம் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலையை மர்மநபர்கள் இரவில் திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சியில் இரண்டு நபர்கள், இரவு நேரத்தில் சிலையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



தாராபுரம்: தாராபுரத்தில் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலை திருடு போன சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தென்தாரை பீமராயர் அக்ரஹரர் பகுதியில் ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் உள்ளது.



இந்த கோவிலின் வெளி பிரகாரத்தில் மூன்று திசைகளிலும்ஸ்ரீ இந்திராணி தேவி மகேஸ்வரி தேவி வைஷ்ணவி தேவி ஆகியோரது கற்சிலைகள் சுவரில் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று இரவு கோவில் பூசாரி பிரவீன் குமார் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு இரவு 9 மணி அளவில் கோவில் நடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.



இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது வெளிப்பிரகார சுவரில் இருந்த ஸ்ரீ இந்திராணி தேவியின் சிலையை மட்டும் மர்ம நபர்கள் பீடத்துடன் திருடி சென்று விட்டனர்.

சம்பவம் குறித்து தாராபுரம் போலீசில் பூசாரி பிரவீன் குமார் புகார் செய்ததை அடுத்து தாராபுரம் குற்றப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், பொதுமக்களின் நடமாட்டம் இருந்த இரவு 9:46 மணியளவில் ஸ்கூட்டர் ஒன்றில் வந்த மர்ம நபர் கோவிலை சுற்று சுற்றி வந்ததாகவும் கோவில் திறந்திருந்த பொழுது சிவப்பு உடை அணிந்த ஒரு மர்ம நபர் கோவிலின் உள்பிரகாரத்தில் ஒளிந்து கொண்டு கோவிலின் நடை சாத்திய பின் ஸ்ரீ இந்திராணி சிலையை பீடத்துடன் பெயர்த்து எடுத்து வெளியே நின்று இருந்த நபரிடம் கொடுத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் சிலையை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...