உடுமலையில் பேரிடர் வழிகாட்டுதல் பயிற்சி - கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

உடுமலையில் உள்ள ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் சத்ய சாய் சேவா சமிதிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து நடத்திய பேரிடர் வழிகாட்டுதல் பயிற்சியில் ஏராளமான மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று சேவை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பெயர்களை பதிவு செய்தனர்.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற பேரிடர் வழிகாட்டுதல் பயிற்சியில் கல்லூரி மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, சத்ய சாய் சேவா சமிதிகள் மற்றும் ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லுாரி சார்பில் பேரிடர் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சேவா சமிதி மாவட்ட குழு நிர்வாகத்தினர் பேரிடர் வழிகாட்டுதல் குறித்து பேசினர். தொடர்ந்து, பேரிடர் காலத்தின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து, கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்விற்கு கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி, தேசிய மாணவர் படை இயக்குனர் கற்பகவள்ளி முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் மற்றும் தேசிய மாணவர் படையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் சேவை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தங்கள் பெயர்களை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...