டாப்சிலிப் மலைவாழ் குடியிருப்பில் மின்வசதி வழங்கக்கோரி நூதன போராட்டம்

பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி கையில் தீப்பந்தம் ஏந்தியும், டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவைகளுக்கு மாலை அணிவித்து, உலாந்தி வனத்துறை அலுவலகம் முன்பு மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கோழிக்கமுத்தி, கூமட்டி மற்றும் எருமைபாறை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள வீடுகளுக்கு மின்சார வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க கோரி பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எருமைபாறை பகுதியில் டிரான்ஸ்பாரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



இதை கண்டித்தும், வீடுகளுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி, உலாந்தி வனசரகர் அலுவலகம் முன்பு மலைவாழ் கிராமங்களை சேர்ந்த மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியும், டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுற்றுலாத்தலமான டாப்சிலிப்பில், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.



ஆனால் மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு மின்சார வசதி செய்து தர வனத்துறை மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கொடுக்கப்பட்ட டிவி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை தற்போது வரை ஒருநாள் கூட பயன்படுத்தாமல் வெறும் காட்சி பொருளாகி உள்ளது.



மேலும் 10 ஆண்டுகளாக பணியாற்றும் SC/ST வன ஊழியர்களைப் பணி நிரந்தரப்படுத்தி ரூ.15,000 ஊதியம் வழங்க கோரியும், மலைவாழ் மக்களுக்கு பாதுகாப்பான வீடு, குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

தகவலறிந்து வந்த ஆனைமலை போலீசார் மற்றும் வனத்துறையினர் கூடிய விரைவில் மின் வசதியை ஏற்படுத்தி தருவதாக கூறியதையடுத்து மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...