ராமநவமி ஊர்வல வன்முறை மற்றும் இத்ரீஸ் பாஷா கொலையை கண்டித்து கோவையில் SDPI ஆர்ப்பாட்டம்

வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின் போது நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்தும், கர்நாடகாவில் மாடுகளை ஏற்றி சென்ற இத்ரீஸ் பாஷா கொல்லப்பட்டதை கண்டித்தும் கோவையில் SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின் போது நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் பீகாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது இரு மதப் பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. சசாராம் பகுதியில் இரு தரப்பினரும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டன.

இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர். அதையடுத்து மாநிலத்தின் பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும் சில தினங்களுக்கு முன் சாந்தனூர் காவல் நிலையம் அருகே மாடுகளை ஏற்றிச்சென்ற போது பசு பாதுகாப்புக்குழு என்ற கும்பல் இத்ரீஸ் பாஷா உட்பட சிலர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இத்ரீஸ் பாஷா உயிரிழந்தார்.



இந்த இரண்டு சம்பவங்களை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் SDPI கோவை மத்திய மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இச்சம்பவங்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...