உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் முறைகேடு!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் நன்கொடை வழங்குவதற்கு முன்பே ரசீது எடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.200 க்கான நன்கொடைக்கு ரூ.100 மதிப்பிலான ரசீது வழங்கப்படுவதாக பக்தர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுன் துவங்கியது. தினமும் கோவில் வளாகத்தில் உள்ள கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

மேலும் பூவோடு வழிபாடும் நேற்று முன்தினம் துவங்கிய நிலையில் தினமும் ஏராளமானோர் பூவோடு எடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஓலிப்பெருக்கி மூலம் கோவில் பகுதியில் நன்கொடை வழங்குபவர்கள் வழங்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நன்கொடை வழங்கும் இடத்தில் தற்சமயம் பெரும் முறைகேடு நடந்து வருவதாக பக்தர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். அதாவது ரூ.200 ரூபாய் நன்கொடை வழங்கினால் ரூ.100 ரூபாய்க்கான ரசிது வழங்கி வருகிறார்கள்.

அதாவது, பக்தர்கள் நன்கொடை வழங்கும் நேரத்தில் தான் ரசீது எடுத்து தர வேண்டும் ஆனால் இந்துசமய அறநிலைய ஊழியர்கள் ஏற்கனவே எடுத்து வைத்த ரசீதுகளை கொடுத்து வருகிறார்கள்.



இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கேட்டால் கூட்ட நெரிசலில் அப்பொழுது எடுக்க முடியாத காரணத்தால் ஏற்கனவே எடுத்து வைத்துள்ளோம் என அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர். இது குறித்து புகார் தெரிவிக்க செயல் அலுவலகம் சென்றால் அலுவலகத்தில் யாரும் இருப்பது இல்லை.

ஆகையால் நன்கொடை வழங்கும் இடத்தில் பெரும் முறைகேடு நடந்து வருவதால் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி உடுமலை மாரியம்மன் கோவில் கல ஆய்வு செய்து தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதனிடையே தேர்த்திருவிழா சமயத்தில் கூட செயல் அலுவலர், அலுவலகத்தில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...