பல்லடம் அருகே வேலைக்கு ஆள் அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி - வடமாநில கும்பல் மீது புகார்!

பல்லடம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் மூர்த்தி என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு ஆள் அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க ஆள் அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருந்தொழுவு கிராமத்தில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட ரிக் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.



இவரிடம் 30 தொழிலாளர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலில் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இவருக்கு ஒரிசாவில் இருந்து தொடர்பு கொண்ட நபர் ஒருவர் போர்வெல் வேலை தெரிந்த ஆட்கள் உள்ளார்கள் என கூறியுள்ளார். மேலும், உங்களுக்கு ஆட்கள் தேவை என்றால் அனுப்பி வைக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மூர்த்தியும் ஐந்து நபர்களை மட்டும் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு 2000 ரூபாய் உணவுக்கு மட்டும் பணம் அனுப்புமாறு பேசிய வட மாநில கும்பலுக்கு ஆன்லைன் மூலம் 2000 ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார்.



இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி ஒரிசாவில் இருந்து ஐந்து வட மாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு புறப்பட்டு விட்டனர் எனவும் அவருடைய ஆதார் கார்டு மற்றும் புகைப்படங்களையும் whatsapp மூலம் அனுப்பி உள்ளனர்.

மேலும் திருப்பூர் அருகே பேருந்து மூலம் பெருமாநல்லூர் வந்தடைந்து விட்டதாகவும் பேருந்து ஓட்டுனருக்கு நபர் ஒருவருக்கு 5000 வீதம் ஐந்து பேருக்கு 18000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே ஆட்களை இறக்கி விடுவோம் இல்லையெனில் கேரளாவுக்கு அனுப்பி விடுவோம் என கூறியதால் மீண்டும் பணம் அனுப்பியுள்ளார்.

பணம் அனுப்பிய அடுத்த ஐந்து நிமிடத்தில் வட மாநில கும்பல் மற்றும் ஓட்டுனரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த மூர்த்தி ரிக் உரிமையாளர்களின் வாட்ஸ் அப் குழுவில் இது குறித்து தகவல் பகிர்ந்துள்ளார். இதுபோன்று திருச்செங்கோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி உரிமையாளர்களிடம் வடமாநில கும்பல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.



இந்நிலையில் வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் வடமாநில கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட ரிக் உரிமையாளர் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் மூர்த்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுபோன்று வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக வரும் அலைபேசி தொடர்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் ஆட்களை நேரில் பார்த்த பிறகு பணத்தை கொடுக்குமாறும் மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...