மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.78 கோடிக்கு பருத்தி விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி!

திருப்பூர் அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற பருத்திக்கான மறைமுக ஏலத்தில், விவசாயிகள் கொண்டு வந்த 2,438.16 குவிண்டால் பருத்தியானது. ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 550 ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


திருப்பூர்: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.1.78 கோடிக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 785 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதனிடையே, பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மூலனூரில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.



இந்நிலையில், வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8,328-கும், குறைந்தபட்சவிலை ரூ.6,700-கும் சராசரி விலை ரூ.7,550ற்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மொத்த அளவு 7,909 மூட்டைகளாகும்.

மொத்தம் 2438.16 குவிண்டால் பருத்தியானது, ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், 28 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றதாகவும் திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்தார்.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...