புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை - கோவையில் நகை வணிகம் அதிரடியாக சரிவு!

கோவையில் தினமும் ரூ. 60 கோடி மதிப்பிலான 100 கிலோ எடையளவு நகை வணிகம் நடப்பது வழக்கம். விலை உயர்வு காரணமாக தற்போது 20 சதவீதம் மட்டுமே அதாவது ரூ.12 கோடி மதிப்பிலான வணிகம் மட்டுமே தினமும் நடப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தின் மிகமுக்கிய தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் சிறந்து விளங்குகிறது. முதலீடு செய்து வர்த்தகம் செய்பவர்கள் 3,000 பேர், உதிரிபாகங்கள் தயாரிப்பவர்கள் 10,000 பேர், தங்கத்தை வாங்கி நகை செய்து தரும் பட்டறை தொழிலில் 45,000 பேர் உள்ளனர்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் கோவையில் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில், கோவையில் தினமும் ரூ. 60 கோடி மதிப்பிலான 100 கிலோ எடையளவு நகை வணிகம் நடப்பது வழக்கம். விலை உயர்வு காரணமாக தற்போது 20 சதவீதம் மட்டுமே அதாவது ரூ.12 கோடி மதிப்பிலான வணிகம் மட்டுமே தினமும் நடக்கிறது.

தங்கத்தின் விலை குறைந்தாலும் அது மிகவும் குறுகிய காலம் மட்டுமே இருக்கும். மீண்டும் உயரும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலை நீடித்தால் தங்க நகை தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும், என்றார்.

கோவை சந்தையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம் - (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்)ஏப்ரல் 4-ம் தேதி - ரூ. 44,400.

ஏப்ரல் 5-ம் தேதி - ரூ. 45,360. ஏப்ரல் 6-ம் தேதி - ரூ. 44,800.

ஏப்ரல் 7-ம் தேதி - ரூ. 44,800 (ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ. 46,160)

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...