ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தாராபுரத்தில் பொதுக்கூட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்பாடு!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாயும், அவர்களுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் திருப்பூர் சுடலை தெரிவித்தார்.



திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் தாராபுரம் பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமையில் கட்சியின் 12 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திருப்பூர் சுடலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:



திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் சாதிவாரி கணக்கெடுப்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஜாதி வாரி கணக்கெடுப்பிற்காக ஆதார் உடன் இணைக்க வேண்டும். இந்த அரசு மேலும் என்னென்ன செய்யும் என்பது தெரியவில்லை.

தமிழக அரசு மக்கள் அட்டை என கொண்டு வரவுள்ளது. குஜராத், உத்தர பிரதேசத்தில் இருந்து வரும் வடமாநிலத்தவர்கள் இங்கு இருக்கும் அரசு வேலைகளை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 299 பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதில் ஒருவர் கூட தமிழர் இல்லை.

ஸ்டேட் பேங்க் ஆஃப் 1500 பணியிடங்கள் நிரப்பப்பட்டது அதிலும் ஒருவர் கூட தமிழர் கிடையாது. அதேபோன்று திருச்சி ரயில்வே பணிமனையில் 1450 பணி நியமன ஆணை வழங்கப்பட்டது அதிலும் ஒருவர்கூட தமிழர் கிடையாது. தமிழர் நிலத்தில் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பலாம் என்று பார்க்கும்போது அனைத்து துறைகளிலும் நமக்கான வேலையை வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

அதை தடுப்பதற்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்த விழுக்காடை நாம் பகிர்ந்து கொண்டால் நம்மக்கு உண்டான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தமிழக அரசு வருகின்ற காலத்தில் 100% வேலை வாய்ப்பு தருகிறார்கள் என கூறினால் அதை தமிழர்களே 100 சதவீதம் பெறுவதற்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது.

தமிழர் வேலை தமிழருக்கு என்று கூற முடியும். சென்னைக்கு மோடி வரும்போது எங்களுடைய தலைவர் வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் "கோ பேக் மோடி" என்னும் கருப்பு பலூனை பறக்க விட்டு எதிர்ப்பை காட்டுவோம்.

என்எல்சி நிறுவனத்திற்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வேல்முருகன் அதிமுக, திமுக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போராடக் கூடியவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...