கோவையில் குரும்பா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பழங்குடியின பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை!

குரும்பா இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்த்து எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும், குரும்பா இன மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: அரசியல் பிரதிநிதித்துவம், எஸ்டி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரும்பா சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமை வகித்தார். குரும்பா குரும்மன்ஸ் சமுதாய மக்களை உடனடியாக பழங்குடி மக்களின் பட்டியலில் சேர்த்து ST சான்றிதழ் வழங்கிட வேண்டும், ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைத்து தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை குரும்பா குரும்மன்ஸ் சமுதாயத்திற்கே கொடுத்திட வேண்டும், ஆடு மேய்க்கும் மற்றும் கம்பளி நெய்தல் போன்ற எங்களது குலத்தொழில் அழிந்து வருவதால் ஆராய்ந்து உரிய காப்பீடு திட்டம் அமைக்க வேண்டும், குரும்பா குரும்மன்ஸ் சமுதாயத்திற்கு அரசியல் அதிகாரத்தில் உள்ள பிரதிநிதித்துவம் கொடுத்து தமிழ்நாடு மாநில அளவில் தகுதியுள்ள குரும்பா குரும்மன்ஸ் இன மக்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உரிய அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மேலும், 50 லட்சம் பேர் உள்ள சமுதாயத்திற்கு உரிய அரசு அங்கீகாரம் கொடுக்காமல் இருப்பது, சமுதாயத்தை புறக்கணிப்பதற்கு சமம் என்றும் ஆகவே உடனே அரசியல் அங்கீகாரம் வழங்கிட அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசையும் வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட குரும்பர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் பதகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் பொன் சுரேஷ்பாபு, பொருளாளர் கிருஷ்ணசாமி, குரும்பா சங்கத்தின் இளைஞர் அணி செயலாளர் தேவராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் முருகேஷ் மற்றும் ராஜேஷ் துணைத்தலைவர், துணைச் செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...