கோவையில் குரும்பா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பழங்குடியின பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை!

குரும்பா இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்த்து எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும், குரும்பா இன மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: அரசியல் பிரதிநிதித்துவம், எஸ்டி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரும்பா சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமை வகித்தார். குரும்பா குரும்மன்ஸ் சமுதாய மக்களை உடனடியாக பழங்குடி மக்களின் பட்டியலில் சேர்த்து ST சான்றிதழ் வழங்கிட வேண்டும், ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைத்து தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை குரும்பா குரும்மன்ஸ் சமுதாயத்திற்கே கொடுத்திட வேண்டும், ஆடு மேய்க்கும் மற்றும் கம்பளி நெய்தல் போன்ற எங்களது குலத்தொழில் அழிந்து வருவதால் ஆராய்ந்து உரிய காப்பீடு திட்டம் அமைக்க வேண்டும், குரும்பா குரும்மன்ஸ் சமுதாயத்திற்கு அரசியல் அதிகாரத்தில் உள்ள பிரதிநிதித்துவம் கொடுத்து தமிழ்நாடு மாநில அளவில் தகுதியுள்ள குரும்பா குரும்மன்ஸ் இன மக்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உரிய அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மேலும், 50 லட்சம் பேர் உள்ள சமுதாயத்திற்கு உரிய அரசு அங்கீகாரம் கொடுக்காமல் இருப்பது, சமுதாயத்தை புறக்கணிப்பதற்கு சமம் என்றும் ஆகவே உடனே அரசியல் அங்கீகாரம் வழங்கிட அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசையும் வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட குரும்பர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் பதகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் பொன் சுரேஷ்பாபு, பொருளாளர் கிருஷ்ணசாமி, குரும்பா சங்கத்தின் இளைஞர் அணி செயலாளர் தேவராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் முருகேஷ் மற்றும் ராஜேஷ் துணைத்தலைவர், துணைச் செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...