தரம் உயர்த்தப்பட்ட காங்கேயம் அரசு மருத்துவமனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதற்கான பெயர்ப் பலகையை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். மேலும், ரூ. 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரச மருத்துவமனை சமீபத்தில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.



இதனை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை பெயர் பலகையை திறந்து வைத்தார்.



மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால், ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை அப்போது நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, காங்கேயம் வட்டம் சாவடிப்பாளையத்தில் 48 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தையும், அவிநாசி ஊராட்சிக்கு உட்பட்ட நம்பியம்பாளையம் 30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் தாயம் பாளையம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் என மொத்தம் 1.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியின்போது மாநில செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...