தரம் உயர்த்தப்பட்ட காங்கேயம் அரசு மருத்துவமனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதற்கான பெயர்ப் பலகையை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். மேலும், ரூ. 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரச மருத்துவமனை சமீபத்தில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.



இதனை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை பெயர் பலகையை திறந்து வைத்தார்.



மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால், ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை அப்போது நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, காங்கேயம் வட்டம் சாவடிப்பாளையத்தில் 48 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தையும், அவிநாசி ஊராட்சிக்கு உட்பட்ட நம்பியம்பாளையம் 30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் தாயம் பாளையம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் என மொத்தம் 1.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியின்போது மாநில செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...