திருப்பூர் அருகே காலி கேஸ் டேங்கர் லாரியில் தீவிபத்து - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காலி கேஸ் டேங்கர் லாரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் லாரியின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது.



திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கேஸ் சேமிப்பு கிடங்கில் கேஸ் இறக்கிவிட்டு, சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. ஈரோடு பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி (வயது38) அந்த லாரியை ஓட்டிச் சென்றார்.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தின் அருகில் ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தியபோது, டிரைவர் இருக்கையின் இடது புறம் தீ பிடித்திருப்பதை கண்ட டிரைவர் ரவி தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டார்.



அப்போது, தீ மளமளவென பரவியதால் அச்சமடைந்த டிரைவர் ரவி, வண்டியிலிருந்து எட்டிக் குதித்து தப்பியோடினார்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி மற்று திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையின் இரண்டு வாகனங்களில் வந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது.



கேஸ் சிலிண்டர்கள் எதுவும் லாரியில் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...