உடுமலையில் பெய்த கோடை மழையால் நனைந்த நெற்பயிர்கள் - கொள்முதல் காலத்தை நீடிக்க கோரிக்கை!

உடுமலை பகுதியில் சுமார் 800 ஏக்கரில் 2ஆம் போக நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் திடீர் கோடை மழை பெய்தது. எனவே, கொள்முதல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நனைந்தன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அமராவதி பாசனப்பகுதியில் விவசாயிகள் சுமார் 800 ஏக்கரில் 2ஆம் போக நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் திடீர் கோடை மழை பெய்தது.



இதனால் நெற்பயிர்கள் ஈரமாகின. மேலும், அறுவடைக்காக வயல்களுக்குள் இயந்திரங்களை ஓட்டிச் செல்ல முடியாத அளவுக்கு சகதியாகி உள்ளது. குறிப்பாக, குமரலிங்கம், சாமராயபட்டி, கொழுமம், கண்ணாடிபுத்தூர், நீலம்பூர், பாப்பான்கு ளம், ருத்ராபாளையம், சாளரப்பட்டி, மடத்துக்குளம், நீலம்பூர் உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் ஈரமானதால் அறுவடைக்கு காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "தற்போது பெய்த கோடை மழையால் நெற்பயிர்கள் சாயும் அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

அதேநேரம், பயிர்கள் நனைந்து நிலம் சகதியாக மாறியுள்ளது. உள்ளே சென்று ஆறு வடை செய்ய 15 நாட்கள் ஆகிவிடும்.

அதன்பிறகு காயவைத்த பிறகே கொள்முதல் மையத்துக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, நெல் கொள்முதலை முடித்து விடாமல், கால நீட்டிப்பு செய்ய வேண்டும்" என்றனர்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...