வால்பாறை - பொள்ளாச்சி சாலையை மறித்த யானைகளால் பரபரப்பு

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள புதுதோட்டம் எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியிலிருந்து மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானைகளை பார்த்து பயந்து வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மூன்று காட்டு யானைகள் சாலையை மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் பயந்து வாகனங்களை நடுவழியிலேயே நிறுத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி தேயிலை தோட்டங்களிலும், வனப்பகுதி சாலை ஓரங்களிலும் சுற்றி வருகிறது.



தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. மேலும் வனப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள், தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிகிறது.

இந்நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியிலிருந்து மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானைகளை பார்த்து பயந்து வாகனங்களை நிறுத்தினர்.



சிறிது நேரம் கழித்து காட்டு யானைகள் சாலையை கடந்து தண்ணீர் இருக்கும் இடத்திற்கு சென்று தண்ணீர் குடித்து நின்றது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்பு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...