கோவை சங்கனூர் ஓடை சீரமைப்பு - பணிகளை விரைந்து முடிக்க ஆணையர் உத்தரவு!

கோவையில் உள்ள சங்கனூர் ஓடையை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க 49 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது நடக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆணையர் மு.பிரதாப், விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Tiupur: கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சங்கனூர் ஓடையானது தடாகம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, கணேஷ்புரம், புலியகுளம், சிங்காநல்லூர் குளம் வழியாகப் பாய்ந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்புவரை நல்ல நீர் ஓடிக்கொண்டிருந்த இந்த ஓடை, தற்போது கழிவுநீர் கால்வாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாநகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த சங்கனூர் ஓடையை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள 49 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து ஓடையின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும், சாலைகள் அமைக்கும் பணியும் நேற்று தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, இந்தப் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...