கோவை சங்கனூர் ஓடை சீரமைப்பு - பணிகளை விரைந்து முடிக்க ஆணையர் உத்தரவு!

கோவையில் உள்ள சங்கனூர் ஓடையை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க 49 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது நடக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆணையர் மு.பிரதாப், விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Tiupur: கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சங்கனூர் ஓடையானது தடாகம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, கணேஷ்புரம், புலியகுளம், சிங்காநல்லூர் குளம் வழியாகப் பாய்ந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்புவரை நல்ல நீர் ஓடிக்கொண்டிருந்த இந்த ஓடை, தற்போது கழிவுநீர் கால்வாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாநகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த சங்கனூர் ஓடையை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள 49 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து ஓடையின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும், சாலைகள் அமைக்கும் பணியும் நேற்று தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, இந்தப் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...