கோவை சங்கனூர் ஓடை சீரமைப்பு - பணிகளை விரைந்து முடிக்க ஆணையர் உத்தரவு!

கோவையில் உள்ள சங்கனூர் ஓடையை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க 49 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது நடக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆணையர் மு.பிரதாப், விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Tiupur: கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சங்கனூர் ஓடையானது தடாகம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, கணேஷ்புரம், புலியகுளம், சிங்காநல்லூர் குளம் வழியாகப் பாய்ந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்புவரை நல்ல நீர் ஓடிக்கொண்டிருந்த இந்த ஓடை, தற்போது கழிவுநீர் கால்வாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாநகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த சங்கனூர் ஓடையை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள 49 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து ஓடையின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும், சாலைகள் அமைக்கும் பணியும் நேற்று தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, இந்தப் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...