கோவை துடியலூரில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் வினோத்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக துடியலூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர்.பார்க் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் வினோத்குமார் என்பதும் அதே பகுதியில் வசித்து வருவதும், இவர் ஆந்திர மாநிலம் குச்சிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை இரயில் மூலம் கடத்தி வந்து கவுண்டம்பாளையம் பகுதியில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்ததும்.

இதைத் தொடர்ந்து, வினோத்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். துடியலூர் காவல் நிலையத்தில் வினோத்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...