தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் அதிகாரிகள், மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன், கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியின் போது கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, டீக்கடை, பழக்கடை, செருப்பு கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் உட்காருவதற்கு கூட இடமில்லாமல் ஆங்காங்கே கடும் வெயிலிலும் நின்றபடியே பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் இருந்து வருகிறது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தனர்.



அதன் அடிப்படையில் இன்று அதிரடியாக தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலையில், தாராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர்.



அப்போது அங்கு ஒரு சில கடை உரிமையாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...