உடுமலை அருகே ஆட்டோ - லாரி நேருக்கு நேர் மோதல் : 4 பேர் படுகாயம்!

பொள்ளாச்சியை சேர்ந்த அண்ணாதுரை (52) என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ஒட்டன்சத்திரத்திற்கு ஆட்டோவில் சென்று திரும்பிய போது, உடுமலை அருகே ஆட்டோவும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்த ஓட்டுனர் உள்பட 4 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே டேங்கர் லாரி மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி அருகேயுள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் அண்ணாதுரை (52). இவர் தனது சரஸ்வதி (50) மற்றும் மகள் நந்தினி (26) ஆகியோருடன் தனது பேரனுக்கு பெயர் வைக்கும் நிகழ்விற்காக ஒட்டன்சத்திரம் நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், விழா முடிந்து மூவரும் ஆட்டோவில் பொள்ளாச்சி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவை பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த குருசாமி (50) என்பவர் ஓட்டி வந்தார்.

இதனிடையே ஆட்டோ பெதப்பம்பட்டி அடுத்த லிங்கம்மநாயக்கன்புதூர் பிரிவு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியில் இருந்து குடிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த ஓட்டுனர் உட்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...