ஏப்.9ம் தேதி முதுமலை வருகிறார் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் 9ம் தேதி பிரதமர் நரேந்திர வருவதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, தெப்பக்காடு முகாமை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.



நீலகிரி: புலிகள் பாதுகாப்பு திட்டம்தொடங்கி 50-வது ஆண்டு ஆவதை கொண்டாடும் விதமாக வருகின்ற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குச் சென்று பார்வையிடுகிறார்.



அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் வருகிறார். 9-ந்தேதி காலை 9.35 மணிக்கு வரும் அவர், வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.

பின்னர் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் யானைகள் குறித்த ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்திப்பதுடன், ரகு மற்றும் பொம்மி யானைகளையும் பார்க்கிறார்.

யானை பகன்கள் மற்றும் பழங்குடியின வனத்துறை ஊழியர்களிடம் பேசும் மோடி, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடி பகுதிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூர் செல்ல உள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் வரவுள்ளதையொட்டி, தெப்பக்காடு பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் 9ம் தேதி வரை முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் மூடப்படும் எனவும், வனவிலங்குகளை காண்பதற்கான வாகன சவாரியும் நாளை முதல் 9ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் வருகையை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதோடு, அப்பகுதியில் டுரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 8-ந்தேதி மாலை 4 மணி முதல் 9-ந்தேதி காலை 10.30 மணி வரை தொரப்பள்ளி - கக்கநல்லா - பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை மூடபடுகிறது.



இதனிடையே தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை சீரமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...