சாலையோர காய்கறி கடைகளை அகற்றுங்கள்..! - தாராபுரத்தில் உழவர் சந்தை விவசாயிகள் புகார்

தாராபுரத்தில் உழவர் சந்தை அருகில் செயல்பட்டுவரும் சாலையோரக் கடைகளால் உழவர் சந்தைக்கு விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகள் விற்க முடியாமல், அந்த காய்கறிகளை தரகர்களிடமே விற்க வேண்டிய அவலநிலை நிலவிவருவதாக தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி கோபாலகிருஷ்ணன், தாராபுரம் நகராட்சியில் மனு ஒன்று அளித்தார்.

அதில், தாராபுரம் உழவர் சந்தைக்கு வரும் வெளியில் உள்ள அனைத்து சாலைகளில் ஓரமாக சட்டவிரோதமாக காய்கறி கடைகளை உழவர் சந்தை நடக்கும் நேரத்தில் நடத்தி உழவர்களின் வாழ்வாதாரத்தை பறித்துவருகிறார்கள்.



இதுகுறித்து பலமுறை தாராபுரம் நகராட்சி ஆணையர் தாராபுரம் வட்டாட்சியர் கோட்டாட்சியரிடம் கவனயீர்ப்பு செய்து மனு கொடுத்தும் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படாமலே இந்த பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது.



உழவர் சந்தைக்கு உழவர்கள் கொண்டுவரும் காய்கறிகள் விற்க இயலாமல், அவர்கள் மீண்டும் இதை தரகர்களிடமே விற்க வேண்டிய அவலநிலை நிலவிவருகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, தமிழ்நாடு அரசு நகராட்சியில் நிர்வாகம் இயக்குனரகம் கடந்த 26/9/2022 அன்று சுற்றறிக்கை எண் 48 45 2022- இன் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உழவர் சந்தை அருகே சட்டவிரோதமாக சாலையோர காய்கறி கடைகளை அனுமதிக்கவே கூடாது என உத்தரவிட்டது.

எனவே, அந்த சுற்றறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து உழவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...