கிணத்துக்கடவில் காட்டுப்பன்றிகள் உலா - வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் கனகராஜ் என்ற விவசாயி தோட்டத்தில் 6 மாதத்திற்கு முன்பு நேந்திரம் வாழை பயிரிட்டு இருந்தார்.



இந்நிலையில், இந்த வாழை கன்றுகளை நள்ளிரவில் வாழைத் தோட்டத்தில் புகுந்த காட்டு பன்றிகள் கடித்துக் குதறி சேதப்படுத்தியது.

விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என கூறி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி குளம் கரைப்பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் உள்ளன. இந்த காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் தோட்டத்திற்குள் கும்பலாக புகுந்து வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு காய்கறி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

வனத்துறையினர் இதனைக் கண்காணித்து இந்த காட்டுப் பன்றிகளை பிடிக்க வேண்டும்.



அப்படி இல்லையெனில் விவசாய தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் நுழையாதவாறு மின்வேலி அமைக்க வனத்துறையினர் அனுமதி தர வேண்டும். தற்போது 500 வாழைக்கன்றுகள் கோடங்கிபாளையத்தில் மட்டும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...