தாராபுரத்தில் அரசு பேருந்து ஜப்தி - அதிகாரிகள் நடவடிக்கை!

திருப்பூர் மாவட்டம் ஊத்துப்பாளையம் பன்னாடி தோட்டத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(45). இவர் கடந்த 2008ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்த நிலையில், உரிய இழப்பீடு தராததால் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அரசு பேருந்தை அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் அரசு பேருந்து மோதி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால், பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஊத்துப்பாளையம் பன்னாடி தோட்டத்தைச் சேர்ந்த காளியப்பன் கவுண்டர் மகன் தங்கவேல்(45). இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 தேதி தனது நண்பர்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பைக்கில் இருந்து கிழே விழுந்த தங்கவேல் படுகாயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தங்கவேலின் தந்தை, தாராபுரம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தங்கவேல் குடும்பத்திற்கு ரூ.7.38லட்சம் இழப்பீடாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தில் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.. மனுவை விசாரித்த நீதிமன்றம் பேருந்து ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

தாராபுரம்-பழனி வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து இன்று ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...