உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் 3 வாகனங்கள் சேதம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மறையூர் சாலையில் நடுப்பகுதியில் நின்ற காட்டு யானை (கொம்பன்), தந்தம் கொண்டு தாக்கியதில் மூன்று வாகனங்களின் முன்பக்கம் சேதமானது.


திருப்பூர்: உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள மறையூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்காக உடுமலைக்கு வந்த சென்ற டிப்பர் லாரி, உடுமலை மூணாறு மாநில நெடுஞ்சாலையில் பூங்கன் ஓடை பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது.



அப்போடு சாலையில் நடுப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை டிப்பர் லாரியின் அருகில் வந்து டிப்பர் லாரியின் முன்பகுதியில் இரண்டு தந்தம் கொண்டு குத்தியது.



அப்போது எதிரே வந்த தமிழ்நாடு பதிவெண் கொண்ட காரிலும் மோதி, பின்புறம் இருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இவ்வாறு மூன்று வாகனங்களும் சேதம் அடைந்தன.

இப்படி நடுரோட்டில் ஒற்றை காட்டு யானை நின்றதால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...