உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - பக்தர்கள் வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கம்பம் போடுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் கம்பம் போடுதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.



உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. வருகின்ற 13ஆம் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று பேருந்து நிலையம் அருகில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் உள்ள கிணற்று நிரில் இரண்டு நாள் ஊறவைத்த அரச மரத்தாலான மூன்று கிளைகள் கொண்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.



மேலும் பக்தி முழக்கங்கள முழுங்க கும்பங்கள் அணிவகுத்து செல்ல மேளதாளத்துடன் பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு நடப்பட்டது . பின்னர் கோவிலை மூன்று முறை பூவோடு எடுத்து சுற்றிவந்து பூஜைகள் நடத்தப்பட்டன.



பூஜைகளுக்கு பின் திருக்கம்பத்துக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் திருக்கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...