பொள்ளாச்சி அருகே பத்ரகாளி அம்மன் கோவிலில் பூ மிதி குண்டம் திருவிழா - பக்தர்கள் தரிசனம்!

பொள்ளாச்சி போடிபாளையம் - குளத்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோவில் பூ மிதி குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பொள்ளாச்சி: போடிபாளையம் - குளத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோவில் பூ மிதி குண்டம் திருவிழா நடைபெற்றது.

பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோவிலின் குண்டம் பூ மிதி திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தமிழகத்தில் பல்வேறு திருத்தலங்களில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்தும், 5 நாட்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர்.



இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் பூ மிதி திருவிழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதில் குண்டம் இறங்கும் பக்தர்கள் ஊர் எல்லையில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பத்ரகாளி அம்மனை வனங்கினர்.



பின்னர் 50 அடி நீளமுள்ள குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.



பத்ரகாளியம்மன் நினைத்து வேண்டிய காரியங்கள் அனைத்தும் கை கூடி வருவதால் 15 நாட்கள் கடும் விரதம் இருந்து பக்தர்கள் குண்டம் இறங்கிநேர்த்தி கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாக பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...