பொள்ளாச்சி அருகே பத்ரகாளி அம்மன் கோவிலில் பூ மிதி குண்டம் திருவிழா - பக்தர்கள் தரிசனம்!

பொள்ளாச்சி போடிபாளையம் - குளத்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோவில் பூ மிதி குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பொள்ளாச்சி: போடிபாளையம் - குளத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோவில் பூ மிதி குண்டம் திருவிழா நடைபெற்றது.

பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோவிலின் குண்டம் பூ மிதி திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தமிழகத்தில் பல்வேறு திருத்தலங்களில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்தும், 5 நாட்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர்.



இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் பூ மிதி திருவிழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதில் குண்டம் இறங்கும் பக்தர்கள் ஊர் எல்லையில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பத்ரகாளி அம்மனை வனங்கினர்.



பின்னர் 50 அடி நீளமுள்ள குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.



பத்ரகாளியம்மன் நினைத்து வேண்டிய காரியங்கள் அனைத்தும் கை கூடி வருவதால் 15 நாட்கள் கடும் விரதம் இருந்து பக்தர்கள் குண்டம் இறங்கிநேர்த்தி கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாக பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...