தாராபுரத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள மாநில தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் திருப்பூர் மாவட்ட சங்கம் சார்பில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதற்கு மாவட்ட தலைவர் இளங்கோ ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஷா, மாவட்ட பொருளாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பணி வரன்முறை மற்றும் பதவி உயர்வினை தாமதம் இன்றி வழங்க வேண்டும். விற்பனையாளருக்கு ஊதிய உயர்வு மற்றும் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்.



அண்டை மாநிலமான கேரளாவில் தொடக்க கடன் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதைபோல தமிழ்நாட்டிலும் இதனை தமிழ்நாடுஅரசு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.



இதில், மாவட்டம், தாலுகா அளவிலான கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...