உடுமலை ரயில் நிலையத்தில் கூடுதல் பார்க்கி்ங் கட்டணம் வசூல் - பயணிகள் புகார்

உடுமலை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை ரயில் நிலையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தை தினசரி ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் வாகனங்களை பாதையை மறித்து நிறுத்துவதால், செல்வதற்கு இடமில்லாமல் பயணிகள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று உடுமலை ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது, ரயில் நிலையத்தில் பைக்குகளை நிறுத்துவதற்கு கட்டணமாக 12 மணி நேரத்துக்கு ரூ.15-ம், 24 மணி நேரத்துக்கு ரூ.20-ம் வசூலிக்கின்றனர். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே நிறுத்தி விட்டு சென்றாலும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது குறித்து கேட்டால் முறையாகப் பதில் அளிப்பதில்லை. எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...