உடுமலையில் ஜமாஅத்தே இஸ்லாமிஹிந்த் சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்வு!

உடுமலை ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்வு உடுமலை - தளி சாலையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சமரசம் மாத இதழ் பொறுப்பு ஆசிரியரான வி.எஸ்.முஹம்மது அமீன் அனைவருக்கும் புத்தகங்களை பரிசளித்தார்.


திருப்பூர்: உடுமலை அருகே ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ரம்ஜான் காலம் என்பதால் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமய நல்லிணக்க நோன்பு துறப்பு உடுமலை - தளி ரோட்டில் உள்ள சன் கான்பரன்ஸ் ஹாலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சமரசம் மாத இதழ் பொறுப்பு ஆசிரியரான வி.எஸ்.முஹம்மது அமீன் கலந்து கொண்டு நோன்பின் சிறப்பு சமய நல்லிணக்கம் பேணுதல் குறித்து பேசினார். தொடர்ந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு சமரசம் மாத இதழ் பொறுப்பாசிரியர் முஹம்மது அமீன் புத்தகங்களை பரிசளித்தார்.

சமய நல்லிணக்க நோன்பு சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை கிளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...