உடுமலையில் ஜமாஅத்தே இஸ்லாமிஹிந்த் சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்வு!

உடுமலை ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்வு உடுமலை - தளி சாலையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சமரசம் மாத இதழ் பொறுப்பு ஆசிரியரான வி.எஸ்.முஹம்மது அமீன் அனைவருக்கும் புத்தகங்களை பரிசளித்தார்.


திருப்பூர்: உடுமலை அருகே ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ரம்ஜான் காலம் என்பதால் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமய நல்லிணக்க நோன்பு துறப்பு உடுமலை - தளி ரோட்டில் உள்ள சன் கான்பரன்ஸ் ஹாலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சமரசம் மாத இதழ் பொறுப்பு ஆசிரியரான வி.எஸ்.முஹம்மது அமீன் கலந்து கொண்டு நோன்பின் சிறப்பு சமய நல்லிணக்கம் பேணுதல் குறித்து பேசினார். தொடர்ந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு சமரசம் மாத இதழ் பொறுப்பாசிரியர் முஹம்மது அமீன் புத்தகங்களை பரிசளித்தார்.

சமய நல்லிணக்க நோன்பு சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை கிளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...