கோவையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை - 4 பேர் கைது!

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், மெய்யரசன், புவனேஷ், பரத் மற்றும் லலித்குமார் ஆகியோரை கைது செய்து, 1050 கிராம் கஞ்சா, 3.2 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர்பெரியநாயக்கன் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள வளம் மீட்பு பூங்கா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த மெய்யரசன், புவனேஷ், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பரத் மற்றும் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த லலித்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 1 கிலோ 50 கிராம் எடையுள்ள கஞ்சா, ரூ.30,000 மதிப்புள்ள 3 கிலோ 200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 4 சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குபதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...