பொள்ளாச்சியில் அரசுப்பேருந்து மீது சொகுசு கார் மோதி விபத்து - புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி!

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் அரசுபேருந்து மீது சொகுசு கார் மோதிய விபத்தில், அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த புதுமாப்பிள்ளை பாலாசுகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை மீட்டு விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாலாசுகேஷ் (வயது23). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பாலாசுகேஷுக்கும் பொள்ளாச்சி ஜமீன்கோட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த யாஷிகா (வயது23) என்ற பெண்ணிற்கும் அடுத்த வாரம் திருமண நிச்சயம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நேற்று யாசிகாவை பார்க்க பொள்ளாச்சி வந்த பாலாசுகேஷ் வெளியில் சுற்றி பார்க்க செல்லலாம் என கூறியுள்ளார். இதையடுத்து, யாசிகா மற்றும் பாலாசுகேஷ் இருவரும் தனது சொகுசு காரில் ஆழியாரை சுற்றி பார்க்க சென்றனர்.



அப்போது வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசுப்பேருந்து மீது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கிய இருவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், படுகாயமடைந்த பாலாசுகேஷ் வழியிலேயே உயிரிழந்தார். யாஷிகாவிற்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆழியார் காவல்நிலைய போலீசார் பாலசுகேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த வாரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...