உப்பாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர்கள்!

தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், இன்று அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இதன்மூலம் 6060 ஏக்கர் பாசன வசதி பெறும்.


திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில் பாசனதிற்க்காக அமைச்சர்கள் தண்ணீர் திறந்து வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பாறு அணையின் வலது மற்றும் இடது கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காக இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து இன்று அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உப்பாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். இதன் மூலம் 6 ஆயிரத்து 60 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பத்மநாபன், குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், உப்பாறு அணை பாசன விவசாயச் சங்க தலைவர் கொங்கு ராசு, உப்பாறு அணை செயற்பொறியாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...