உப்பாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர்கள்!

தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், இன்று அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இதன்மூலம் 6060 ஏக்கர் பாசன வசதி பெறும்.


திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில் பாசனதிற்க்காக அமைச்சர்கள் தண்ணீர் திறந்து வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பாறு அணையின் வலது மற்றும் இடது கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காக இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து இன்று அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உப்பாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். இதன் மூலம் 6 ஆயிரத்து 60 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பத்மநாபன், குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், உப்பாறு அணை பாசன விவசாயச் சங்க தலைவர் கொங்கு ராசு, உப்பாறு அணை செயற்பொறியாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...