உப்பாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர்கள்!

தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், இன்று அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இதன்மூலம் 6060 ஏக்கர் பாசன வசதி பெறும்.


திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில் பாசனதிற்க்காக அமைச்சர்கள் தண்ணீர் திறந்து வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பாறு அணையின் வலது மற்றும் இடது கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காக இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து இன்று அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உப்பாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். இதன் மூலம் 6 ஆயிரத்து 60 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பத்மநாபன், குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், உப்பாறு அணை பாசன விவசாயச் சங்க தலைவர் கொங்கு ராசு, உப்பாறு அணை செயற்பொறியாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...