ஈஷா மையத்திற்கு பிரதமர் வருவதை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் காவல் துறையினர்

கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் ஆதியோகி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை வருவதை முன்னிட்டு 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை கோவை வருகின்றார்.

பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு விழா நடைபெறும் மையத்தினை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பானது போடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறை ஏ.டி.ஜி.பி திரிபாதி தலைமையில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவு (என்.எஸ்.ஜி) மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு (எஸ்.பி.ஜி) அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு, இந்திய விமானப்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் தொடந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதில், வானிலை மாற்றம் காரணமாக ஹெலிகாப்டர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் விமான நிலையத்தில் இருந்து தரைவழி பயணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து செல்ல குண்டு துளைக்காக காரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டு நிபுணர்கள் நிகழ்ச்சி நடைபெறும் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியான செம்மேடு, முட்டத்துவயல், இருட்டுபள்ளம், ஆலாந்துறை ஆகிய பகுதிகள் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாளை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...